நீட் மசோதாவுக்கு ஒப்புதல் கோரி குடியரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேல்நடவடிக்கைக்காக அக்கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக பதில் தரப்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சகமோ அப்படியொரு கடிதமே வரவில்லை என்கிறது. காணாமல் போவது கடிதமல்ல, ஒன்றிய அரசின் நிர்வாக நேர்மையும் தான் என சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.